Saturday, September 6, 2008

என் முதல் காதல் கடிதம்


To amlu..,

With love swathi


இது தான் காதலா……



என் கண்ணிமை போல் காப்பவளே

நான் கண் மூடும் வரை கூட வருபவளே

கடவுளின் கருவறை போல்

என் உள்ளத்தில் வீற்றிருப்பவளே

எனக்கே எனக்கு மட்டும் உரியவளான

என் இரகசிய சினேகிதி.

என் புன்னகைக்கு பின் இருப்பதும் நீயே

என் அழுகைக்கு அணை போடுவதும் நீயே

என் துயரத்திற்க்கு தோள் கொடுப்பதும் நீயே

எட்டிப் பிடிக்க தட்டிக் கொடுப்பதும் நீயே

தடுக்கி விழுகையில் தூக்கி நிறுத்துவதும் நீயே

தவறு செய்யும் போது திருத்துவதும் நீயே

அதை தெரிந்தே செய்த போது

என்னை ------ வார்த்தைகளால்

அர்ச்சனை செய்வதும் நீயே

நேற்று வரை அறியவில்லை

நீயின்றி நான் இல்லையென்று

அறியா வயதில் தோழியாக

அறிந்த பின் தோழியாகவும்

என் வாழ்க்கைத் துணையாகவும்.

சொல்லித் தான் இனியும் உனக்கு

தெரிய வேண்டுமா?....

நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை!!!!!!!


நட்பின் சுவை


நட்பின் சுவை



நன்றாகவே கழிந்தது.

ஒன்றாக நாங்கள் சென்ற இசை விருந்து

ரசித்தது இசையை மட்டுமல்ல

எங்கள் நட்பின் சுவையும் தான்.

ஆடலும் எங்கள் அலம்பல்கலும்

கூச்சல்களும் எங்கள் கரவொலிகளையும் கண்டு

திசை மாறியதோ பல கண்கள்

இங்கு எங்கள் கச்சேரியை துவக்கிய பின்.

கைகோர்த்து ஆடியபோது எங்கள்

இதயத்துடிப்பு கூட “நட்பு நட்பு”

என்றல்லவா ஒலித்தது.

ஆனந்தத்தின் எல்லை எதுவென்று

என் விழிகள் உணர்த்தியது

வழிந்தோடும் கண்ணீர்.

“நாங்கள் நண்பர்கள்”

என்ற பெருமையும் பெருமிதமுமாய்

புன்னகையும் புன்சிரிப்புமாய்

நீடிக்க வேண்டும் எங்கள் பினைப்பு

நான் மண்ணுள் புதையும் வரை

என்ற பிராத்தனையுடன்.