Sunday, November 8, 2009




அந்த ஒரு மழைக் கால

அந்தி மாலைப் பொழுதில்..

காதலின் போர்வையில்

மற்றவை பதுங்கி இருக்க

விளக்கொளியின் கீழ்

நட்பின் வெளிச்சத்தில்

நாம்.

Friday, July 24, 2009


எதிர்பாரா தருணத்தில்

முகத்தை முத்தமிடும்

என் மழைக் காதலனைப் போலவே..

எனக்கான உன் எண்ணங்களும்..

மெய் சிலிர்த்து என்னை

மெய்மறக்கச் செய்யும்..

போக்கிஷ தருணங்களாய்


Monday, February 2, 2009

பிறப்பின் முற்றுப்புள்ளி




I DEDICATE THIS POEM TO MY DIVYA….



பிறப்பின் முற்றுப்புள்ளி

ஈடில்லா இழப்பை ஏற்க இயலாமல்

உன் விழிகளில் அந்த வலியறிந்த போது

கடவுளினும் கொடியவன் எவனுமில்லையென

என் இயலாமயை மறைத்துக் கொண்டேன்

துக்கத்தின் சுமையோ உன்னை அழுத்த

உனை தாங்கிக் கொள்ளத் துடிக்குதே என்னுள்ளம்.

ஒரு பிறப்பின் முற்றுப்புள்ளியில் இன்று

உன் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்

உனக்கான வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை...

ஆறுதல் கூறும் அறுகதையும் எனக்கில்லை

உன் கரம் பற்றி எனக்குள் பூட்டிக்கொண்டேன்

அன்றே

அது போதும்

என் வார்த்தைகளும் உணர்வுகளையும் வேதனையையும்

உனக்கு உணர்த்த……